சமணம்:
இந்தியாவில் தோன்றிய பழைய இறைமறுப்புக் கொள்கைகளை சமணம் என்ற பொதுப்பெயரில் அடையாளப்படுத்துவர். சமணர் என்பதற்கு எளிய வாழ்க்கையையும் துறவு நிலையையும் பின்பற்றுபவர்கள் என்று பொருள்.கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சிலக்குழப்பங்களால் சமணம் என்ற சொல்லே ஜைனத்தை மட்டும் குறிக்க தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ் மொழி நிகண்டுகளில் சாவகர், அருகர், ஆசீவகர் மூவரையுமே சமணர் என பண்டைய தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர். பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் பௌத்தம் அஞ்ஞானம், வேதாந்தம் போன்றவற்றையும் சமணம் என்றே அடையாளப்படுத்தினர்.
Be the first person to comment this article