Thiruvarutpayan

சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான திருவருட் பயன் உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இந்நூல், ஒவ்வொன்றும் பத்துக் குறட்பாக்களால் ஆன பத்து அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்: உமாபதி சிவாச்சாரியார்

காப்பு
நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்கன்று காண்.

பதிமுதுநிலை

குறள்வெண்பா 1 (அகரவுயிர் )

(இறைவனது இயல்பு கூறும் குறள்)

அகர வுயிர்போ லறிவாகி யெங்கும் () அகர உயிர் போல் அறிவாகி எங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து. (01) நிகர் இல் இறை நிற்கும் நிறைந்து.

பதப்பிரிப்பும் அமைப்பும்
நிகரில் இறை, அகர உயிர்போல், அறிவாகி, எங்கும் நிறைந்து நிற்கும்.

இதன்பொருள்

நிகரில் இறை= ஒப்பில்லாத இறைவன்; அகர உயிர்போல்= எழுத்துகளுக்கு எல்லாம் அகரம் உயிராக நின்று விளங்குவதுபோல், அறிவாகி= அறிவுக்கு அறிவாகி, எங்கும்= எல்லாவிடங்களிலும், நிறைந்துநிற்கும்= நிறைந்து (வியாபித்து) நிற்பான்.
விளக்கம்
எழுத்துகளுக்கு எல்லாம் என்பது வருவித்து உரைக்கப்பட்டது. ‘இறை’ என்பது தங்குவது என்று பொருள்படும், இறைவன் எல்லாவிடங்களிலும் தங்கியுள்ளவன் ஆதலால் இறைவன் எனப்பட்டான். அதாவது, இறைவனில்லாத இடம் இல்லை என்பதாம். விஷ்ணு என்பதும் அது; எங்கும் வியாபித்துள்ளவன் என்பதாம். அகரஒலி எல்லா எழுத்துகளிலும் கலந்திருக்கின்றது, அதுபோலக் கடவுள் எல்லாப்பொருளிலும் கலந்து இருக்கின்றார் என்பதுபொருள். ‘நிற்கும்’ என்பது அசைவற்று நிற்கும் என்பதாம். அசைவு விகாரம், இறைவன் விகாரமற்றவன், மாறுதலற்றவன் என்பதாம். ‘அகரம்’ என்பதால் உருவநிலையும், ‘அறிவாகி’ (அறிவு உருவமாகி) என்பதால் உருவமற்றநிலை’யும், ‘உயிர்போல்’ என்றதனால் அருவுருவ நிலையும் குறிக்கப்பட்டன.
எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன் என்ற இறைவனின் பண்புகள் முறையே இறை, அறிவாகி, நிகரில் என்பனவற்றால் குறிக்கப்பட்டன.

குறள்வெண்பா 2 (தன்னிலைமை )

தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி () தன் நிலைமை மன் உயிர்கள் சாரத் தரும் சத்தி
பின்னமிலா னெங்கள் பிரான். (02) பின்னம் இலான் எங்கள் பிரான்.
தம்முடைய நின்மலம் மலம் முதலாகவுள்ள ஒப்பற்ற நிலையை நிலைபெற்ற ஆன்மாக்கள் பொருந்தக் கூடி அருளுகின்ற சிவன் திருவருட்சத்தியுடன் பிரிப்பின்றி ஒன்றாய் இருப்பவர்.

குறள்வெண்பா 3 (பெருமைக்கும் )

பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றி () பெருமைக்கும் நுண்மைக்கும் பேர் அருட்கும் பேற்றின்
னருமைக்கு மொப்பின்மை யான். (03) அருமைக்கும் ஒப்பு இன்மையான்.
நிறை, நொய்மை, கருணை, கிடைத்தற்கருமை ஆகிய தன்மைகளால் இறைவனுடன் ஒப்பிட யாருமற்றவர்.

குறள்வெண்பா 4 ( ஆக்கி)

ஆக்கி யெவையு மளித்தா சுடனடங்கப் () ஆக்கி எவையும் அளித்து ஆசுடன் அடங்கப்
போக்குமவன் போகாப் புகல். (04) போக்கும் அவன் போகாப் புகல்.
பிரமாவைக் கொண்டு படைத்தலும், திருமலைக் கொண்டு காத்தலுஞ் செய்விக்கும், எல்லாவற்றையும் சங்கரிப்பவராய் உள்ள முதல்வரே, எல்லாவற்றிற்கும் புகலிடமாவார்.

குறள்வெண்பா 5 ( அருவும்)

அருவு முருவு மறிஞர்க் கறிவா () அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம்
முருவ முடையா னுளன். (05) உருவம் உடையான் உளன்.
அருவும், உருவும், அருவுருவுமாகவுள்ள ஒன்பது பேதமான திருமேனிகளை உடையவரே அறிவுக்கறிவாக விளங்கும் ஞானவடிவினராகிய சிவபெருமான்.

குறள்வெண்பா 6 (பல்லாருயிர் )

பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவ () பல் ஆர் உயிர் உணரும் பான்மை என மேல் ஒருவன்
னில்லாதா னெங்க ளிறை. (06) இல்லாதான் எங்கள் இறை.
ஆன்மாக்களுக்கு எல்லாம் அறிவித்தருள இறைவன் இருப்பது போல, இறைவனுக்கு அறிவிக்க மேலொருவர் இல்லை. இறைவனே பரம்பொருள்.

குறள்வெண்பா 7 (ஆனாவறி )

ஆனா வறிவா யகலா னடியவர்க்கு () ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வானாடர் காணாத மன். (07) வான் நாடர் காணாத மன்.
தேவர்களால் அறிய முடியாத இறைவன், தன்னை அன்புடன் வழிபடும் மெய்யடியார்களை விட்டு நிங்காது, அருள் செய்வார்.

குறள்வெண்பா 8 (எங்கும் )

எங்கு மெவையு மெரியுறுநீர் போலேகந் () எங்கும் எவையும் எரி உறு நீர் போல் ஏகம்
தங்குமவன் றானே தனி. (08) தங்கும் அவன் தானே தனி.
வெந்நீரில் உள்ள சூடு அதன் ஒவ்வொரு துளியிலும் வியாபித்து இருப்பது போல, இறைவன் உலகத்தில் எல்லாவற்றிலும் கலந்திருப்பினும் அவற்றுன் தன்மை சாராமல் தனித்து நிற்கும் இயல்பினன்

குறள்வெண்பா 9 (நலமிலன் )

நலமில னண்ணார்க்கு நண்ணினர்க்கு னல்லன் () நலம் இலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன். (10) சலம் இலன் பேர் சங்கரன்.
கடவுள் விருப்புவெறுப்பு இல்லாதவர்; தம் வழிநிற்பார்க்குப் பேரின்பமாகிய சுகத்தைக் கொடுப்பதால் சங்கரன் என்னும் திருப்பெயர் உடையவர்.

குறள்வெண்பா 10 (உன்னுமுள )

உன்னுமுள தைய மிலதுணர்வா யோவாது () உன்னும் உளது ஐயம் இலது உணர்வாய் ஓவாது
மன்னுபவந் தீர்க்கு மருந்து. (10) மன்னு பவம் தீர்க்கு மருந்து.
அறிவிக்கறிவாய் நின்று பிறவிப்பிணியைத் திர்க்கும் இறைவன் வழிபடின் முத்தியின்பங் கிடைக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

2. உயிரவை நிலை

குறள்வெண்பா 11(பிறந்தநாள் )

பிறந்தநாள் மேலும் பிறக்குநாள் போலுந் () பிறந்த நாள் மேலும் பிறக்கும் நாள் போலும்
துறந்தோ ரிறப்போர் தொகை. (01) துறந்தோர் இறப்போர் தொகை.

குறள்வெண்பா 12 (திரிமலத்தார் )

திரிமலத்தாரொன்றதனிற் சென்றார்க ளன்றி () திரி மலத்தார் ஒன்று அதனில் சென்றார்கள் அன்றி
யொருமலத்தா ராயு முளர். (02) ஒரு மலத்தர் ஆயும் உளர்.

குறள்வெண்பா 13 (மூன்றுதிறத் )

மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள் () மூன்று திறத்து உள்ளாரும் மூல மலத்து உள்ளார்கள்
தோன்றலர்தொத் துள்ளார் துணை. (03) தோன்றலர் தொத்து உள்ளார் துணை.

குறள்வெண்பா 14 (கண்டவற்றை )

கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கியிடுந் () கண்டவற்றை நாளும் கனவில் கலக்கி இடும்
திண்டிறலுக் கென்னோ செயல். (04) தி்ண் திறலுக்கு என்னோ செயல்.

குறள்வெண்பா 15 (பொறியின்றி )

பொறியின்றி யொன்றும் புணராதே புந்திக் () பொறி இன்றி ஒன்றும் புணராதே புந்திக்கு
கறிவென்ற பேர்நன் றற. (05) அறிவு என்ற பேர் நன்று அற.

குறள்வெண்பா 16 (ஒளியும் )

ஒளியு மிருளு முலகு மலர்கட் () ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
டெளிவி லெனிலென் செய. (06) தெளிவு இல் எனில் என் செய.

குறள்வெண்பா 17 (சத்தசத்தை )

சத்தசத்தைச் சாரா தசத்தறியா தங்கணிவை () சத்து அசத்தைச் சாராது அசத்து அறியாது அங்கண் இவை
யுய்த்தல்சத சத்தா முயிர். (07) உய்த்தல் சதசத்தாம் உயிர்.

குறள்வெண்பா 18 (இருளிலிரு )

இருளி லிருளாகி யெல்லிடத்தி லெல்லாம் () இருளி்ல் இருள் ஆகி எல் இடத்தில் எல்லாம்
பொருள்க ளிலதோ புவி. (08) பொருள்கள் இலதோ புவி.

குறள்வெண்பா 19(ஊமன்கண் )

ஊமன்கண் போல வொளியு மிகவிருளே () ஊமன் கண் போல ஒளியும் மிக இருளேயாம்
யாம்மன்கண் காணாத வை. (09) மன் கண் காணாதவை

குறள்வெண்பா 20 ( அன்றளவு)

அன்றளவு மாற்றுமுயி ரந்தோ வருள்தெரிவ () அன்று அளவும் ஆற்றும் உயிர் அந்தோ அருள் தெரிவது
தென்றளவொன் றில்லா விடர். (10) என்று அளவு ஒன்று இல்லா இடர்.

ஆசிரியர்: உமாபதி சிவாச்சாரியார்

3. இருள்மலநிலை[தொகு]

குறள்வெண்பா 21 (துன்றும் )

துன்றும் பவத்துயரு மின்புந் துணைப்பொருளு () துன்றும் பவத் துயரும் இன்பும் துணைப் பொருளும்
மின்றென்ப தெவ்வாறு மில். (08) இன்று என்பது எவ்வாறும் இல்.

குறள்வெண்பா 22 (இருளானதன்றி )

இருளான தன்றி யிலதெவையு மேகப் () இருள் ஆனது அன்றி இலது எவையும் ஏகப்
பொருளாகி நிற்கும் பொருள். (09) பொருள் ஆகி நிற்கும் பொருள்.

குறள்வெண்பா 23 (ஒருபொருளுங் )

ஒருபொருளுங் காட்டா திருளுருவங் காட்டு () ஒரு பொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும்
மிருபொருளுங் காட்டா திது. (10) இரு பொருளும் காட்டாது இது.

குறள்வெண்பா 24 ( அன்றளவி)

அன்றளவி யுள்ளொளியோ டாவி யிடையடங்கி () அன்று அளவி உள்ளொளியோடு ஆவி இடை அடங்கி
யின்றளவும் நின்ற திருள். (08) இன்று அளவும் நின்றது இருள்.

குறள்வெண்பா 25 (பலரைப் )

பலரைப் புணர்ந்து மிருட் பாவைக்குண் டென்றுங் () பலரைப் புணர்ந்தும் இருள் பாவைக்கு உண்டு என்றும்
கணவற்குந் தோன்றாத கற்பு. (09) கணவற்கும் தோன்றாத கற்பு.

குறள்வெண்பா 26 (பன்மொழிகள் )

பன்மொழிக ளென்னுணரும் பான்மை தெரியாத () பல் மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத
தன்மை யிருளார்தந் தது. (10) தன்மை இருளார் தந்தது.

குறள்வெண்பா 27 (இருளின்றேல் )

இருளின்றேல் துன்பென் னுயிரியல்பேற் போக்கும் () இருள் இன்றேல் துன்பு என் உயில் இயல்பேல் போக்கும்
பொருளுண்டே லொன்றாகப் போம். (08) பொருள் உண்டேல் ஒன்றாகப் போம்.

குறள்வெண்பா 28(ஆசாதியேல் )

ஆசாதி யேலணைவ காரணமென் முத்திநிலை () ஆசாதியேல் அணைவ காரணம் என் முத்தி நிலை
பேசா தகவும் பிணி. (09) பேசாது அகவும் பிணி.

குறள்வெண்பா 29 (ஒன்றுமிகினும் )

ஒன்று மிகினு மொளிகவரா தேலுள்ள () ஒன்று மிகினும் ஒளி கவராதேல் உள்ளம்
மென்று மகலா திருள். (10) என்றும் அகலாது இருள்.

குறள்வெண்பா 30 (விடிவாமளவும் )

விடிவா மளவும் விளக்கனைய மாயை () விடிவு ஆம் அளவும் விளக்கு அனைய மாயை
வடிவாதி கன்மத்து வந்து. (08) வடிவு ஆதி கன்மத்து வந்து.

4. அருளதுநிலை

குறள்வெண்பா 31 (அருளிற் )

அருளிற் பெரிய தகிலத்தில் வேண்டும் () அருளில் பெரியது அகிலத்தில் வேண்டும்
பொருளிற் றலையிலது போல். (09) பொருளில் தலையிலது போல்.

குறள்வெண்பா 32 (பெருக்க )

பெருக்க நுகர்வினை பேரொளியா யெங்கு () பெருக்க நுகர்வினை பேரொளியாய் எங்கும்
மருக்கனென நிற்கு மருள். (10) அருக்கன் என நிற்கும் அருள்.

குறள்வெண்பா 33 (ஊனறியா )

ஊனறியா தென்று முயிரறியா தொன்றுமிவை () ஊன் அறியாது என்றும் உயிர் அறியாதது ஒன்றும் இவை
தானறியா தாரறிவார் தான். (08) தான் அறியாது ஆர் அறிவார் தான்

குறள்வெண்பா 34 (பாலாழி )

பாலாழி மீனாளும் பான்மைத் தருளுயிர்கள் () பால் ஆழி மீன் ஆளும் பான்மைத்து அருள் உயிர்கள்
மாலாழி யாளு மறித்து. (09) மால் ஆழி ஆளும் மறித்து.

குறள்வெண்பா 35 (அணுகு )

அணுகு துணையறியா வாற்றோனி லைந்து () அணுகு துணை அறியா ஆற்றோனில் ஐந்தும்
முணர்வை யுணரா துயிர். (10) உணர்வை உணராது உயிர்.

குறள்வெண்பா 36 (தரையை )

தரையை யறியாது தாமே திரிவோர் () தரையை அறியாது தாமே திரிவோர்
புரையை யுணரார் புவி. (10) புரையை உணரார் புவி.

குறள்வெண்பா 37 (மலைகெடுத்தோர் )

மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந் () மலை கெடுத்தோர் மண் கெடுத்தோர் வான் கெடுத்தோர் ஞானம்
தலைகெடுத்தோர் தற்கேடர் தாம். (08) தலைகெடுத்தோர் தன் கேடர் தாம்.

குறள்வெண்பா 38 (வெள்ளத்துள் )

வெள்ளத்துள் நாவற்றி யெங்கும் விடிந்திருளாங் () வெள்ளத்துள் நா வற்றி எங்கும் விடிந்து இருளாம்
கள்ளத் தலைவர் கடன். (09) கள்ளத் தலைவர் கடன்.

குறள்வெண்பா 39 (பரப்பமைந்து )

பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூசை () பரப்பு அமைந்து கேண்மின் இது பால் கலன் மேல் பூசை
கரப்பருந்த நாடுங் கடன். (10) கரப்பு அருந்த நாடும் கடன்.

குறள்வெண்பா 40 (இற்றை )

இற்றை வரையியைந்து மேதும் பழக்கமிலா () இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கம் இலா
வெற்றுயிர்க்கு வீடு மிகை. (10) வெற்று உயிர்க்கு வீடு மிகை

5. அருளுருநிலை[தொகு]

குறள்வெண்பா 41 (அறியாமை )

அறியாமை யுள்நின் றளித்ததே காணுங் () அறியாமை உள் நின்று அளித்ததே காணும்
குறியாக நீங்காத கோ. (08) குறியாக நீங்காத கோ.

குறள்வெண்பா 42 (அகத்துறு )

அகத்துறுநோயக் குள்ளின ரன்றி யதனைச் () அகத்து உறு நோய்க்கு உள்ளினர் அன்றி அதனைச்
சகத்தவருங் காண்பரோ தான். (09) சகத்தவரும் காண்பரோ தான்.

குறள்வெண்பா 43 (அருளாவகை )

அருளா வகையா லருள்புரிய வந்த () அருளா வகையால் அருள் புரிய வந்த
பொருளா ரறிவார் புவி. (10) பொருள் ஆர் அறிவார் புவி.

குறள்வெண்பா 44 (பொய்யிருண்ட )

பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம் () பொய் இருண்ட சிந்தைப் பொறி இலார் போதம் ஆம்
மெய்யிரண்டுங் காணார் மிக. (4) மெய் இரண்டும் காணார் மிக.

குறள்வெண்பா 45 (பார்வையென )

பார்வையென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம் () பார்வை என மாக்களை முன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி. (5) போர்வை எனக் காணார் புவி.

குறள்வெண்பா 46 (எமக்கென் )

எமக்கென் னெவனுக் கெவைதெரியு மவ்வத் () எமக்கு என் எவனுக்கு எவை தெரியும் அவ் அவ்
தமக்கவனை வேண்டத் தவிர். (6) தமக்கு அவனை வேண்டத் தவிர்.

குறள்வெண்பா 47 (விடநகிலம் )

விடநகிலம் மேவினுமெய்ப் பாவகனின் மீளுங் () விடம் நகிலம் மேவினும் மெய்ப் பாவகனின் மீளும்
கடனிலிருள் போவதிவன் கண். (10) கடனில் இருள் போவது இவன்கண்.

குறள்வெண்பா 48 ( அகலத்)

அகலத் தருமருளை யாக்கும் வினைநீக்குஞ் () அகலத் தரும் அருளை ஆக்கும் வினை நீக்கும்
சகலர்க்கு வந்தருளுங் காண். (8) சகலர்க்கு வந்து அருளும் காண்.

குறள்வெண்பா 49 (ஆரறிவார் )

ஆரறிவா ரெல்லா மகன்ற நெறியருளும் () ஆர் அறிவார் எல்லாம் அகன்ற நெறி அருளும்
பேரறிவான் வாராத பின். (9) பேர் அறிவான் வாராத பின்.

குறள்வெண்பா 50 (ஞானமிவன் )

ஞான மிவனொழிய நண்ணியிடும் நற்கல்லனற் () ஞானம் இவன் ஒழிய நண்ணி இடும் நல் கல் அனல்
பானு வொழியப் படின். (10) பானு ஒழியப் படின்.

அருளுருநிலை முற்றும்

6. அறியும் நெறி[தொகு]

குறள்வெண்பா 51 (நீடுமிரு )

நீடு மிருவினைகள் நேராக நேராதல் () நீடும் இரு வினைகள் நேர் ஆக நேர் ஆதல்
கூடுமிறை சத்தி கொளல். (1) கூடும் இறை சத்தி கொளல்.

குறள்வெண்பா 52 ( ஏகனநேகன்)

ஏக னநேக னிருள்கரும மாயையிரண் () ஏகன் அநேகன் இருள் கருமம் மாயை இரண்டு
டாகவிவை யாறாதி யில். (2) ஆக இவை ஆறு ஆதியில்.

குறள்வெண்பா 53 (செய்வானும் )

செய்வானுஞ் செய்வினையுஞ் சேர்பயனுஞ் சேர்ப்பவனு () செய்வானும் செய் வினையும் சேர் பயனும் சேர்ப்பவனும்
முய்வானு முளனென் றுணர். (03) உய்வானும் உளன் என்று உணர்.

குறள்வெண்பா 54 (ஊனுயிரால் )

ஊனுயிரால் வாழு மொருமைத்தே யூனொடுயிர் () ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தே ஊனொடு உயிர்
தானுணர்வோ டொன்றாந் தரம். (04) தான் உணர்வோடு ஒன்றாம் தரம்.

குறள்வெண்பா 55 (தன்னிறமும் )

தன்னிறமும் பன்னிறமுந் தானாங்கற் றன்மைதரும் () தன் நிறமும் பல் நிறமும் தானாம் கல் தன்மை தரும்
பொன்னிறம்போல் மன்னிறமிப் பூ. (05) பொன் நிறம் போல் மன் நிறம் இப்பூ

குறள்வெண்பா 56 (கண்டொல்லை )

கண்டொல்லை காணுநெறி கண்ணுயிர் நாப்பண்ணிலை () கண் தொல்லை காணும் நெறி கண் உயிர் நாப்பண் நிலை
யுண்டில்லை யல்ல தொளி. (06) உண்டு இல்லை அல்லது ஒளி.

குறள்வெண்பா 57 ( புன்செயலி)

புன்செயலி னோடு புலன்செயல்போல் நின்செயலை () புன் செயலினோடு புலன் செயல் போல் நின் செயலை
மன்செயல தாக மதி. (07) மன் செயலதாக மதி.

குறள்வெண்பா 58 (ஓராதே )

ஓராதே வொன்றையுமுற் றுன்னாதே நீமுந்திப் () ஓராதே ஒன்றையும் உற்று உன்னாதே நீ முந்திப்
பாராதே பார்த்ததனைப் பார். (08) பாராதே பார்த்ததனைப் பார்.

குறள்வெண்பா 59 (களியே )

களியே மிகுபுல மாய்க்கருதி ஞான () களியே மிகு புலமாய்க் கருதி ஞான
வொளியே வொளியா வொளி. (09) ஒளியே ஒளியாய் ஒளி.
குறள்வெண்பா 60 (கண்டபடி )
கண்டபடி யேகண்டு காணாமை காணாமற் () கண்டபடியே கண்டு காணாமை காணாமல்
கொண்டபடி யேகொண் டிரு. (10) கொண்டபடியே கொண்டு இரு.

7. உயிர்விளக்கம்

குறள்வெண்பா 61 (தூனிழலார் )

தூனிழலார் தற்காருஞ் சொல்லார் தொகுமிதுபோல் () தூ நிழல் ஆர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் இதுபோல்
தானதுவாய் நிற்குந் தரம். (01) தான் அதுவாய் நிற்கும் தரம்.

குறள்வெண்பா 62 (தித்திக்கும் )

தித்திக்கும் பாடானுங் கைக்குந் திருந்திடுநாப் () தித்திக்கும் பால் தானும் கைக்கும் திருந்திடும் நாப்
பித்தத்தி டான்டவிர்ந்த பின். (02) பித்தத்தில் தான் தவிர்ந்த பின்.

குறள்வெண்பா 63 (காண்பான் )

காண்பா னொளியிருளி்ற் காட்டிடவுந் தான்கண்ட () காண்பான் ஒளி இருளி்ல் காட்டிடவும் தான் கண்ட
வீ்ண்பாவ மெந்நாள் விடும். (03) வீண் பாவம் எந்நாள் விடும்.

குறள்வெண்பா 64 (ஒளியுமிரு )

ஒளியு மிருளு மொருமைத்துப் பன்மை () ஒளியும் இருளும் ஒருமைத்துப் பன்மை
தெளிவு தெளியார் செயல். (04) தெளிவு தெளியார் செயல்.

குறள்வெண்பா 65 (கிடைக்கத் )

கிடைக்கத் தகுமேநற் கேணமையார்க் கல்லா () கிடைக்கத் தகுமே நல் கேண்மையார்க்கு அல்லால்
லெடுத்துச் சுமப்பானை யின்று. (05) எடுத்துச் சுமப்பானை இன்று.

குறள்வெண்பா 66 (வஞ்சமுடன் )

வஞ்ச முடனொருவன் வைத்த நிதிகவரத் () வஞ்சமுடன் ஒருவன் வைத்த நிதி கவரத்
துஞ்சினனோ போயினனோ சொல். (06) தஞ்சினனோ போயினனோ சொல்.

குறள்வெண்பா 67 (தனக்கு )

தனக்கு நிழலின்றா மொளிகவருந் தம்ப () தனக்கு நிழல் இன்றாம் ஒளி கவரும் தம்பம்
மெனக்கவர நில்லா திருள். (07) எனக் கவர நில்லாது இருள்.

குறள்வெண்பா 68 ( உற்கை)

உற்கைதரும் பொற்கை யுடையவர்போ லுண்மைப்பின் () உற்கை தரும் பொன் கை உடையவர் போல் உண்மைப் பின்
னிற்க வருளார் நிலை. (10) நிற்க அருளார் நிலை.

குறள்வெண்பா 69 (ஐம்புலனாற் )

ஐம்புலனாற் றாங்கண்ட தென்றா லதுவொழிய () ஐம்புலனால் தாம் கண்டது என்றால் அது ஒழிய
வைம்புலனார் தாமா ரதற்கு. (08) ஐம்புலனார் தாம் ஆர் அதற்கு.

குறள்வெண்பா 70 (தாமே )

தாமே தருபவரைத் தம்வலியி னாற்கருத () தாமே தருபவரைத் தாம் வலியினால் கருதல்
லாமே யிவனா ரதற்கு. (09) ஆமே இவன் ஆர் அதற்கு.

8. இன்புறுநிலை[தொகு]

குறள்வெண்பா 71 ( இன்புறுவார்)

இன்புறுவார் துன்பா ரிருளி னெழுஞ்சுடரின் () இன்புறுவார் துன்பார் இருளின் எழும் சுடரின்
பின்புகுவார் முன்புகுவார் பின். (1) பின் புகுவார் முன்புகுவார் பின்.

குறள்வெண்பா 72 (இருவர் )

இருவர் மடந்தையருக் கென்பயனின் புண்டா () இருவர் மடந்தையருக்கு என்பயன் இன்பு உண்டாம்
மொருவ னொருத்தி யுறின். (02) ஒருவன் ஒருத்தி உறின்.

குறள்வெண்பா 73 (இன்பதனை )

இன்பதனை யெய்துவார்க் கீயு மவர்க்குருவ () இன்பு அதனை எய்துவார்க்கு ஈயும் அவர்க்கு உருவம்
மின்பகன மாதலினா லில். (03) இன்ப கனம் ஆதலினால் இல்.

குறள்வெண்பா 74 (தாடலைபோற் )

தாடலைபோற் கூடியவை தானிகழா வேற்றின்பக் () தாள் தலை போல் கூடி அவைதான் நிகழா வேறு இன்பம்
கூடலைநீ யேகமெனக் கொள். (04) கூடலை நீ ஏகம் எனக் கொள்.

குறள்வெண்பா 75 (ஒன்றாலு )

ஒன்றாலு மொன்றா திரண்டாலு மோசையெழா () ஒன்றாலும் ஒன்றாது இரண்டாலும் ஓசை எழாது
தென்றாலொன் றன்றிரண்டு மில். (5) என்றால் ஒன்று அன்று இரண்டும் இல்.

குறள்வெண்பா 76 (உற்றாரும் )

உற்றாரும் பெற்றாரு மோவா துரையொழியப் () உற்றாரும் பெற்றாரும் ஓவாது உரை ஒழியப்
பற்றாரு மற்றார் பவம். (06) பற்றாரும் அற்றார் பவம்.

குறள்வெண்பா 77 (பேயொன்றுந் )

பேயொன்றுந் தன்மை பிறக்கு மளவுமினி () பேய் ஒன்றும் தன்மை பிறக்கும் அளவும் இனி
நீயொன்றுஞ் செய்யாது நில். (07) நீ ஒன்றும் செய்யாது நில்.

குறள்வெண்பா 78 (ஒண்பொருட்கண் )<br />

ஒண்பொருட்க ணுற்றார்க் குறுபயனே யல்லாது () ஒள் பொருள் கண் உற்றார்க்கு உறு பயனே அல்லாது
கண்படுப்போர் கைப்பொருள்போற் காண். (08) கண்படுப்போர் கைப் பொருள் போல் காண்.

குறள்வெண்பா 79 (மூன்றாய )

மூன்றாய தன்மையவர் தம்மின் மிகமுயங்கித் () மூன்றாய தன்மை அவர் தம்மின் மிக முயங்கித்
தோன்றாத வின்பமதென் சொல். (10) தோன்றாத இன்பம் அது என் சொல்.

குறள்வெண்பா 80 (இன்பில் )

இன்பி லினிதென்ற லின்றுண்டே லின்றுண்டா () இன்பில் இனிது என்றல் இன்று உண்டேல் இன்று உண்டாம்
மன்பு நிலையே வது. (10) அன்பு நிலையே அது.

9. அஞ்செழுத்தருள் நிலை[தொகு]

குறள்வெண்பா 81 (அருணூலும் )
அருணூலு மாரணமு மல்லாது மைந்தின் () அருள் நூலும் ஆரணமும் அல்லாது ஐந்தின்
பொருணூ டெரியப் புகின். (01) பொருள் நூல் தெரியப் புகின்.
குறள்வெண்பா 82 (இறைசத்தி
இறைசத்தி பாச மெழில் மாயை யாவி () இறை சத்தி பாசம் எழில் மாயை ஆவி
யுறநிற்கு மோங்காரத் துள். (02) உற நிற்கும் ஓங்காரத்து உள்.

குறள்வெண்பா 83 (ஊனநடனம் )
ஊன நடன மொருபா லொருபாலாம்()ஊன நடனம் ஒரு பால் ஒரு பாலாம்
ஞானநடனந் தானடுவே நாடு.(03)ஞான நடனம் தான் நடுவே நாடு.

குறள்வெண்பா 84 (விரியமந )

விரியமந மேவியவ்வை மீளவிடா சித்தம்விரிய ம ந மேவி யவ்வை மீள விடா சித்தம்
பெரியவினை தீரிற் பெறும். (04)பெரிய வினை தீரில் பெறும்.

குறள்வெண்பா 85 (மாலார் )
>

மாலார் திரோத மலமுதலாய் மாறுமோ<மாலார் திரோதம் மலம் முதலாய் மாறுமோ மேலாகி மீளா விடின்.(05)மேல் ஆகி மீளா விடின். குறள்வெண்பா 86 (ஆராதி )

ஆராதி யாதார மந்தோ வதுமீண்டுஆராதி ஆதாரம் அந்த அது மீண்டு
பாராது மேலோதும் பற்று. (06)பாராது மேல் ஓதும் பற்று.

குறள்வெண்பா 87 (சிவமுதலே )

சிவமுதலே யாமாறு சேருமே றீரும்<சிவ முதலே ஆமாறு சேருமேல் தீரும் பவமிதுநீ யோதும் படி.(07)பவம் இது நீ ஓதும்படி குறள்வெண்பா 88 (வாசி )

வாசி யருளியவை வாழ்விக்கு மற்றதுவேவாசி அருளியவே வாழ்விக்கும் மற்று அதுவே
யாசி லுருவமுமா மங்கு. (08)ஆசு இல் உருவமும் ஆம் அங்கு.

குறள்வெண்பா 89 (ஆசினவா )

ஆசினவா நாப்பண் ணடையா தருளினால்<ஆசில் நவா நாப்பண் அடையாது அருளினால் வாசியிடை நிற்கை வழக்கு.(09)வாசி இடை நிற்கை வழக்கு. குறள்வெண்பா 90 (எல்லா )

எல்லா வகையு மியம்புமிவ னகன்றுஎல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று
நில்லா வகையை நினைந்து. (10)நில்லா வகையை நினைந்து.

10. அணைந்தோர் தன்மை

குறள்வெண்பா 91 (ஓங்குணர்வில் )

ஓங்குணர்வி லுள்ளடங்கி யுள்ளத்தி லின்பொடுங்கத்<ஓங்கு உணர்வில் உள் அடங்கி உள்ளத்தில் இன்பு ஒடுங்கத் தூங்குவர்மற் றேதுண்டு சொல்.(01)தூங்குவர்மற்று ஏது உண்டு சொல். குறள்வெண்பா 92 (ஐந்தொழிலும் )

ஐந்தொழிலுங் காரணர்க ளாந்தொழிலும் போகநுகர்ஐந்தொழிலும் காரணர்களாம் தொழிலும் போகம் நுகர்
வெந்தொழிலும் மேவார் மிக. (02)வெம் தொழிலும் மேவார் மிக.

குறள்வெண்பா 93(எல்லாமறியு )

எல்லா மறியு மறிவுறினு மீங்கிவரொன்எல்லாம் அறியும் அறிவு உறினும் ஈங்கு இவர் ஒன்று
றல்லா தறியா ரற.(03)அல்லாது அறியார் அற.

குறள்வெண்பா 94 (புலனடக்கி)

புலனடக்கித் தம்முதற்கட் புக்குறுவார் போதார்புலன் அடக்கித் தம் முதல் கண் புக்கு உறுவார் போதார்
தலனடக்கு மாமை தக. (04)தலம் நடக்கும் ஆமை தக.

குறள்வெண்பா 95 (அவனை )

அவனையகன் றெங்கின்றா மாங்கவனா மெங்கு<அவனை அகன்று எங்கு இன்றாம் ஆங்கு அனாம் எங்கும் மிவனையொழிந் துண்டாத லில்.(05)வனை ஒழிந்து உண்டாதல் இல். குறள்வெண்பா 96 (உள்ளும் )

உள்ளும் புறம்பு மொருதன்மைக் காட்சியருக்உள்ளும் புறம்பும் ஒரு தன்மைக் காட்சியருக்கு
கெள்ளுந் திறமேது மில். (06)எள்ளும் திறம் ஏதும் இல்.

குறள்வெண்பா 97 (உறுந்தொழிற்கு )

உறுந்தொழிற்குத் தக்க பயனுலகந் தத்தம்< உறும் தொழிற்குத் தக்க பயன் உலகம் தம் தம் வறுந்தொழிற்கு வாய்மை பயன்.(07)வறுந்தொழிற்கு வாய்மை பயன்.
குறள்வெண்பா 98 (ஏன்றவினை )

ஏன்ற வினையுடலோ டேகுமிடை யேறும்வினைஏன்ற வினை உடலோடு ஏகும் இடை ஏறும் வினை
தோன்றி லருளே சுடும். (08)தோன்றில் அருளே சுடும்.


குறள்வெண்பா 99 (மும்மை )

மும்மை தரும்வினைகள் மூளாவாம் மூதறிவார்க்<மும்மை தரும் வினைகள் மூளாவாம் மூதறிவார்க்கு கம்மையு மிம்மையே யாம்.(09)அம்மையும் இம்மையே ஆம். குறள்வெண்பா 100 (கள்ளத்தலை )

கள்ளத் தலைவர் துயர்கருதித் தங்கருணைகள்ளத் தலைவர் துயர் கருதித் தம் கருணை
வெள்ளத் தலைவர் மிக. (10)வெள்ளத்து அலைவர் மிக.

உமாபதி சிவாச்சாரியார் இயற்றியருளிய திருவருட்பயன் முற்றும்

Related Articles

  • Sangarpa Niragaranam
    Sangarpa Niragaranam
    சங்கற்ப நிராகரணம் என்பது உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பட்டது. இது சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது சைவ சித்தாந்தத்துக்கு நெருக்கமான, அகச்…
  • Unmai Neri Vilakam
    Unmai Neri Vilakam
    உண்மை நெறி விளக்கம், தமிழில் எழுதப்பட்ட சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்று. சைவ சித்தாந்தத்தை விளக்கும் இன்னொரு நூலான சிவப்பிரகாசத்தில் குறிப்பிடப்பட்ட தசகாரியம்…
  • Nenju Vidu Thuthu
    Nenju Vidu Thuthu
    நெஞ்சு விடு தூது என்பது உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பட்டது. இது சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது இறைவனிடம் தூது விடுவதுபோல…
  • Kodi Kavi
    Kodi Kavi
    கொடிக்கவி, மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. இவற்றுள் மிகச் சிறியதும் இதுவே. நான்கு வெண்பாக்களை மட்டுமே கொண்டது இந் நூல். இதை…
  • Potri Patrodai
    Potri Patrodai
    பூமன்னு நான்முகத்தோன் புத்தேளி ராங்கவர் கோன் மாமன்னு சோதி மணிமார்ப – னாமன்னும் வேதம்வே தாந்தாம் விளக்கஞ்செய் விந்துவுடன் நாதநா தாந்த…